கடைச்சி உலக போர் திரை விமர்சனம்-indiastarsnow.com

நட்ராஜ் என்கிற நட்டி தான் குரல் மூலம் உலகம் எப்படி தோன்றியது என இவர் சொல்லும் கதையே நம்மை படத்திற்குள் கொண்டு வருகிறது 2028-ல் கதை தொடங்குகிறது, நட்டி தமிழக முதலமைச்சர் மச்சான் மற்றும் பினாமி, இவர் தான் இந்த ஆட்சியையே உருவாக்கினார் என்பது போல் ஒரு கிங் மேக்கர் ஆக இருக்கிறார்.
ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிய, இதில் இந்தியா நடுநிலையாக உள்ளது, மெட்ராஸ் (தமிழக ) அரசியலில் முதலமைச்சரின் (நாசர்) மச்சான் நடராஜ் (நடராஜ்/நட்டி), தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு ஊழல் கேம் ஆடிக்கொண்டிருக்கிறார். ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் தமிழரசன் (ஹிப்ஹாப் ஆதி) அடுத்து கல்வி அமைச்சராகப் போகிற முதல்வரின் மகள் கீர்த்தனாவை (அனகா) வனவிலங்கு தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறார் ஹீரோ. இருவருக்கும் காதல் மலர, கல்வி அமைச்சராகப் பதவி ஏற்கும் கீர்த்தனா, எளியவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிடுகிறார்.
இந்த நிலையில் (ரிபப்ளிக்) பணம் பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருக்க, அதை வெளியே எடுக்க நட்ராஜ் ஒரு கலவரத்தை ஏற்படுத்துகிறார். ஆனால், கலவரம் கண்ட்ரோல் மீறி செல்ல, ராணுவம் களம் இறங்கி தமிழகத்தை கைப்பற்றுகிறது. இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை தாக்க ஆரம்பிக்க, மொத்த சென்னையையும் அழிக்கின்றனர், ரிபப்ளிக் ராணுவம் அவர்களிடம் இருந்து முதல்வர் மற்றும் அவர் மக்கள் மற்றும் நாட்டு மக்கள் எப்படி காப்பாற்ற பட்டார்கள் என் பத்தே கடைச்சி உலக போர் திரை கதை .