நந்தன் திரை விமர்சனம்
புதுக்கோட்டை மாவட்டத்தின் வணங்கான்குடியின் ஊராட்சி மன்றத் தலைவராக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த கோப்புலிங்கத்தின் (பாலாஜி சக்திவேல்) குடும்பமே அன்னபோஸ்ட்டாகப் பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்நிலையில், அந்த ஊராட்சி தனி தொகுதியாக அரசால் அறிவிக்கப்படுகிறது. அதனால், தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த “கூழ்பானை அம்பேத்குமாரை (சசிகுமார்) “தலைவர் தேர்தலில் போட்டியிட வைத்து, அவரைத் தலைவராக்க முடிவெடுக்கிறார் கோப்பு லிங்கம். அதற்குக் கோப்புலிங்கத்தையே உலகமாக நினைத்து, அவருக்குத் தீவிர விஸ்வாசியாக இருக்கும் அம்பேத்குமாரும் சம்மதித்து மனுத்தாக்கல் செய்கிறார் அன்னபோஸ்ட்டாகப் அம்பேத்குமார் , தேர்வு ஆகிறார் பின்பு பள்ளி நிகச்சியில் அவமான பட அவர் மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னென்ன பிரச்னைகள் வருகின்றன என்பதை திரையில் சாதிய அரசியலின் மோசமான தாக்கம் என்ன என்பதையும்
அனைவரும் சிந்திக்கும் வகையில் இயக்குனர் இரா.சரவணனின் `நந்தன்’ என்ற திரை கதை மூலம் சாதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்…