Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • நீரிழிவு ஆய்விற்காக முன்னேறிய AI மாதிரிகளை உருவாக்க MDRF-உடன் கைகோர்க்கும் எம்பெட்யூஆர்!

நீரிழிவு ஆய்விற்காக முன்னேறிய AI மாதிரிகளை உருவாக்க MDRF-உடன் கைகோர்க்கும் எம்பெட்யூஆர்!

admin May 23, 2024
நீரிழிவு ஆய்விற்காக முன்னேறிய AI மாதிரிகளை உருவாக்க MDRF-உடன் கைகோர்க்கும் எம்பெட்யூஆர்!

நீரிழிவு ஆய்விற்காக முன்னேறிய AI மாதிரிகளை உருவாக்க MDRF-உடன் கைகோர்க்கும் எம்பெட்யூஆர்!

சென்னை, 23 மே 2024: இந்தியாவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயின் பரவலைத் தணிக்கும் முயற்சியில், ஆசியாவின் மிகப்பெரிய தனித்த நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனமான மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.டி.ஆர்.எஃப்), நீரிழிவு மேலாண்மைக்கான மேம்பட்ட மாதிரிகளை உருவாக்க, AI (செயற்கை நுண்ணறிவு) எட்ஜ் கம்ப்யூட்டிங், பொருள்களின் இணையம் (ஐஓடி) மற்றும் மேகக் கணினியம் (கிளவுட்) ஆகியவற்றில் உலகளாவிய புதுமையாகச் செயல்படும் முன்னணி நிறுவனமான எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸுடன் இன்று ஒரு செயல்திட்ட அடிப்படையிலான கூட்டாண்மைக்குள் நுழைந்தது. இந்த துறையில் மருத்துவ ஆய்வுகளின் செயல்திறனை வலுப்படுத்துதல் மற்றும் நாட்டில் நீரிழிவு மேலாண்மையின் தரத்தை மேம்படுத்துதல் என்ற குறிக்கோளுடன், AI-இன் உருமாற்றும் சக்தியை நீரிழிவு ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்த, எம்பெட்யூஆர் மற்றும் எம்.டி.ஆர்.எஃப் இடையேயான இந்த ஒத்துழைப்பு முயல்கிறது. எம்.டி.ஆர்.எஃப் மற்றும் எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸ் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.டி.ஆர்.எஃப்) தலைவர் டாக்டர் வி மோகன் மற்றும் எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ராஜேஷ் சி சுப்பிரமணியம் இடையே, இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கையெழுத்தானது.

இந்த ஒத்துழைப்பின் மூலம் எம்பெட்யூஆர் மற்றும் எம்.டி.ஆர்.எஃப் இருதரப்பில் இருந்தும் நிபுணர்கள், பல்லாயிரம் நோயாளிகளை மாதிரி அளவாகக் கொண்ட, எம்.டி.ஆர்.எஃப்-இன் விரிவான தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (சிஜிஎம்) தரவுத்தொகுப்புகளில் ஆழமாக ஆய்வு செய்ய இயலும். எம்பெட்யூஆர்-ஆல் உருவாக்கப்பட்ட அதிநவீன AI கம்ப்யூட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி, நிபுணர் குழுக்கள் தொடர்ச்சியான கற்றுக்கொள்ளும் மற்றும் மெருகேற்றிக் கொள்ளும் திறன் கொண்ட அதிநவீன AI மாதிரிகளை உருவாக்கும். இரு நிறுவனங்களின் வல்லுநர்கள் இணைந்து செயல்படுவதோடு, தரவின் செயல்திறனையும் பொருத்தத்தையும் அளவிட பல்வேறு அளவீடுகளைப் பயன்படுத்துவார்கள். நீரிழிவு மேலாண்மையின் முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் இது உறுதி செய்யும்.

‘இந்த லட்சிய முயற்சியில் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் கூட்டாளராக இருப்பதில் எம்பெட்யூஆர் உற்சாகமாக உள்ளது’ என்று எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ராஜேஷ் சி சுப்பிரமணியம் கூறுகிறார். அவர் மேலும், ‘AI-ஆல் சக்தியூட்டப்பட்ட வடிவமைப்பு அங்கீகாரமானது நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் வாழ்க்கை முறை காரணிகளுக்கும் இணை நோயுற்ற நிலைமைகளுக்கும் இடையிலான சிக்கலான தொடர்புகளை கட்டவிழ்க்க உதவும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த மேம்பட்ட பகுப்பாய்வு தனிப்பயனாக்கப்பட்ட கல்வி மற்றும் சிகிச்சை திட்டங்களுக்கு வழி வகுக்க உதவும். AI-ஐப் பயன்படுத்தி மக்கள்மயமாக்கப்பட்டதாக அமைந்த, புத்திசாலித்தனமான கண்காணிப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு ஆகியவற்றால் முன்னெடுத்துச் செல்லப்படும், நீரிழிவினை உண்டாக்கக்கூடிய ஆபத்தான காரணிகளைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் கூடிய ஒரு ஆரோக்கியமான உலகத்தை நாங்கள் கற்பனை செய்கிறோம்.’ என்று தெரிவித்தார்.

கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி மோகன் கூறுகையில், “எம்.டி.ஆர்.எஃப் மற்றும் எம்பெட்யூஆர் இடையிலான கூட்டாண்மை நீரிழிவு ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. எங்கள் விரிவான சிஜிஎம் தரவை எம்பெட்யூஆர்-இன் மேம்பட்ட AI திறன்களுடன் இணைப்பதன் மூலம், AI-ஆல் செலுத்தப்படக்கூடிய நுண்ணறிவுகள் நீரிழிவு மேலாண்மையின் செயல்படும் பரப்பை மாற்றக்கூடியதொரு எதிர்காலத்தை நாங்கள் முன்னோடியாகக் கொண்டிருக்கிறோம். இந்த கூட்டுமுயற்சி முக்கியமான காரணிகளை அடையாளம் காணும் எங்களது திறனை வேகப்படுத்துகிறது மற்றும் துறையில் புதிய மற்றும் பெரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது. தொழில்நுட்பமும் சுகாதாரமும் நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சைகளுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்கும் வகையில் உள்ள இது, உண்மையிலேயே ஆய்வின் எதிர்காலமாகும்.” என்று அவர் தெரிவித்தார்.

இந்த செயல்திட்டம் சார்ந்த அணுகுமுறையானது நீரிழிவு பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை மாற்றக்கூடிய பயனுள்ள தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பகுப்பாய்வின் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகள் வளர்ச்சி தொடர்பான முயற்சிகளுக்கு வழிகாட்டும் மற்றும் AI மாதிரிகள் வலுவான மற்றும் பொருத்தமான தரவுகளில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதையும் உறுதி செய்யும்.

எம்.டி.ஆர்.எஃப் பற்றி:மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.டி.ஆர்.எஃப்) என்பது இந்தியாவில் சென்னையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமாகும். நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய சிக்கல்கள் குறித்து அறிவியல் ரீதியான ஆராய்ச்சியை நடத்துவதற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை 1996-இல் இந்தியாவின் முன்னணி நீரிழிவு மருத்துவரான டாக்டர் வி. மோகன் என்பவரால் நிறுவப்பட்டது. எம்.டி.ஆர்.எஃப்-இன் முதன்மை கவனமானது நீரிழிவு நோயின் காரணங்கள், தடுப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதிலும், அதனுடன் தொடர்புடைய சிக்கல்களைப் புரிந்துகொள்வதிலும் உள்ளது. எம்.டி.ஆர்.எஃப்-இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி நீரிழிவு நோயின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது, இதில் தொற்றுநோயியல், மரபியல், மருத்துவ மேலாண்மை மற்றும் பொது சுகாதாரம் ஆகியவை அடங்கும். நீரிழிவு நோயைப் பற்றிய அறிவை முன்னேற்றுவதிலும், நோயாளியின் பராமரிப்பை மேம்படுத்துவதிலும், இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் நீரிழிவு நோயின் வளர்ந்து வரும் சுமையை எதிர்த்துப் போராடுவதிலும் எம்.டி.ஆர்.எஃப் முக்கிய பங்கு வகிக்கிறது.

எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸ் பற்றி: எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸ் ஒரு முன்னணி உட்பொதிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது சிலிக்கான் பள்ளத்தாக்கை தலைமையிடமாகக் கொண்டுள்ளது மற்றும் சென்னையில் அதன் இருப்பைக் கொண்டுள்ளது. எட்ஜ், ஐஓடி மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றின் தொடர்பை உருவாக்கி, எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸ் ஆனது அளவிடக்கூடிய இணைப்பு, நெறிப்படுத்தப்பட்ட செயல்பாடுகள், தகவமைப்பு அமைப்புகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான உட்பொதிக்கப்பட்ட சாதனங்களுக்கான முன்கணிப்பு நுண்ணறிவுகளை மேம்படுத்துகின்றது. 20 ஆண்டுகளாக, நிறுவனம் வெற்றிகரமாக ஸ்டார்ட் அப்கள் முதல் பார்ச்சூன் 500 நிறுவனங்கள் வரை வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள, மாறுபட்ட உலகளாவிய வாடிக்கையாளர்களின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளை வெற்றிகரமாக நிவர்த்தி செய்துள்ளது. தொழில்துறை தன்னியக்கம், மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள், சுகாதாரத் தொழில்நுட்பம் (தொலைதூர நோயாளி கண்காணிப்பு), வீட்டு தன்னியக்கம் மற்றும் இன்னும் பல பயன்பாடுகளில் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

Post navigation

Previous MG Motor India expands its network in Chennai; inaugurates new dealership and workshop With 8 touchpoints in Chennai, car buyers can have more access to MG sales and aftersales
Next MDRF Partners with embedUR to co-create advanced AI models for Diabetic Research

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • News

தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது

April 26, 2026
பேட்டில் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

பேட்டில் திரை விமர்சனம்

April 25, 2026
’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்
  • Movie Review
  • Reviews

’பிரேக்ஃபாஸ்ட் திரை விமர்சனம்

April 25, 2026
நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்
  • News

நடிகர் புகழ் சென்னையில் ‘துபாய்’ கருப்பொருளிலான “துபாய் சம்மர் கார்னிவல் 2026”-ஐத் தொடங்கி வைத்தார்

April 24, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.