ஸ்டார் திரை கதையின் நாயகன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் கலை (கவின்) “7 வயதில் ” இருந்தே ஸ்டார் ஆக வேண்டும் என்று கனவுகளுடன் வளரும் நாயகன் கலை (கவின்) வீட்டில் அப்பா, அக்கா செல்லப்பிள்ளையாக உள்ளார் , அம்மா “ரொம்ப கோவக்காரர்” நடித்துள்ளார் . கலை (கவின்) +2வில் ஜஸ்ட் பாஸ் எடுத்த கலை (கவின்) திரை துறையில் ஸ்டார் ஆக visual communication படிக்க ஆசைப்படுகிறார் அனல் அம்மா இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்து விட காலேஜ் படித்துக்கொண்டே அப்பாவின் உதவி உடன் அவ்வப்போது பட ஆடீஷன்களில் கலந்து கொள்கிறார். அப்போது மும்பை சேந்த பிரபல டைரக்டர் நடிப்பு பயிற்சி வகுப்புக்கு கலை (கவின்) விண்ணப்பத்தை தேர்வு செய்ய்கிறார் கவினும் மும்பை சென்று நடித்து காட்டுகிறார் அதில் தேர்வாகாததால் அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்கிறார் அப்போது அவர் பணம் திருடு போகிறது தனது அப்பாவுக்கு போன் செய்து எனிடம் காசு இல்லை என்று சொல்ல அவர் அப்பா நீ வெற்றி பெறாமல் திரும்ப வரக்கூடாது என்று சொல்ல அவர் மும்பையில் தங்கி பிரபல இயக்குனரை திரும்பவும் வாய்ப்பு கேட்க்கிறார் கலை (கவின்) மீண்டும் வாய்ப்பு கிடைக்க நடிப்பு பயிற்சி முடித்து ஊர் திருமபிக்கிறார் கவின் வாழ்வில் தோல்வி வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு அடுத்ததை நோக்கி ஓடும் அவனுக்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது அதில் முகத்தில் காயம் ஏற்பட
தன் லட்சியத்தில் வெற்றி பெற முடியாது என்று இறுதியில் துவண்டு, மிரண்டு, தோய்ந்து போய் நிற்கிறான் அப்போது அவன் காதலியும் கைவிட ஸ்டார் கலை (கவின்) தன்னபிக்கையும் அவனை கைவிட, இயற்கை அவனுக்கு எப்படி உதவியது ?ஸ்டார் கலை தன்னபிக்கை மீட்டு கொண்டு வந்தது யார் ? இது போன்ற கேள்விக்கு பதில் சொல்லும் விடைதான்படம் தான் இந்த ஸ்டார் படத்தின் கதை.
திரை கதையின் இரண்டாம் பத்தியில் விபத்தினால் அவன் கனவை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான். ஆனால் அவனே விட்டு விலகினாலும், அவனை மீண்டும் மீண்டும் சினிமா கனவுகள் துரத்திக்கொண்டே இருக்கிறது. தன் ஆசையையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல், குடும்ப கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் அவன், ஒரு கட்டத்தில் தனக்கு பிடித்தவர்களையும் தன்னையும் வெறுக்க ஆரம்பிக்கிறான். ஸ்டார் கவினின் நண்பன் தனது கல்லுரி நிகச்சி ஒன்றுக்கு செல்ல அங்கு அவனுக்கு கல்லூரி பருவத்தில் ஒரு காதல் அது முறிந்து போக்காக , மீண்டும் அதே கல்லூரியை முடித்த அவனை தேடி வரும் ஒரு காதல் என இரண்டு அழகான காதல் கதைகள்.கல்லூரி பருவத்தில் ஒரு தலை காதல் கொண்ட அந்த பெண் உனது தன்னம்பிக்கை பேசினால் நான் இன்று சிறப்பாக உள்ளேன் எனது காதலை ஏற்றுக்கொள்வாயா என கேட்க நயகன் தன்னை மாற்றிக்கொண்டு சாதாரண வேலைக்கு செல்லும் அவன், தான் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்து, வெறுத்து, தன்னுடன் இருப்பவர்களை புறந்தள்ளி அன்புக்குரியவர்களின் வெறுப்பிற்கும் ஆளாகிறான். அவனுக்கு தேவையான வாய்ப்பு கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் நேரத்தில், அவன் மனைவிக்கு பிரசவ வலியால் சீரியஸ் என போன் வருகிறது அவன் சினிமா கனவை தூக்கி எரிந்து விட்டு தனது மனைவி மற்றும் பிள்ளை உள்ள மருத்துவமனைக்கு வருகிறார் பிறகு என நடத்துது என்பதை ஸ்டார் திரை படத்திற்கு சென்று பாருங்கள் ஸ்டார் கவின் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார்.
கவினின் மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார், கலை (கவின்) தந்தையாக நடித்துள்ள லால் மற்றும் அம்மாவாக நடித்த நடிகை கீதாவும் எதார்த்தமான நடிப்பின் மூலம் மனதை தொடுகிறார்கள். மகனுக்கு ஒரு தந்தையாக இல்லாமல் தோளோடு தோள் நின்று நண்பனாக லால் நடித்தது ஸ்டார் திரை படத்திற்கு தனி சிறப்பு.
ஸ்டார் திரை படத்திற்கு “நாயகிகள் இரட்டை குழல் துப்பாக்கி போல்” தனது நடிப்பினை சிறப்பாக முதல் பாதியில் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் இரண்டாம் பாதியில் அதிதி பொஹங்கர் இருவருக்கும் படத்தில் தங்கள் நடிப்பினை திரையில் ரசிக்கும் படி மிக சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தின் இசையின் நாயஜன் யுவன் ஷங்கர் ராஜா, பின்னணி இசையிலும்,பின்னணி பாடகராக மும்பையில் நடிக்க வாய்ப்பு இல்லாமலும் கையில் காசு இல்லாமலு உயிர் பிழைக்க கவின் போராடும் போது வரும் பாடல் திரையரகில் அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளது தனி சிறப்பு .
ஸ்டார் திரை படத்திற்கு ஒளிப்பதிவு படத்தின் ஒளிப்பதிவாளர் எழில் மிகப்பெரிய பலம்.பிரதீப் எடிட்டிங் திரையில் ரசிக்கும் படி உள்ளது தனி சிறப்பு .
திரை உலகில் துவண்ட இருக்கும் பல கலைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் திரை கதை அமைத்து பாமர மனிதனின் அசாதாரணமான வாழ்க்கையை திரையில் அழகாகவும், வலியுடனும், கண்ணீருடனும் எடுத்துக் காட்டியுள்ளார் “இயக்குனர் இளனுக்கு திரை உலகின் இளம் கலைஞர்கல் சார்பாக பாராட்டுக்கள்”.