
மகாபாரதத்தில் உள்ள “வல்லவன் வகுத்ததடா ” என்ன சொற்களை மைய கருவாக எடுத்துக்கொண்டு முழு நிலப்படமாக விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் துரை, “வல்லவன் வகுத்ததடா ” திரையில் (“கர்ணன்” திரைப்படத்தில் சிவாஜி கணேசன் கர்ணனாக நடித்திருந்தனர்) திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் போல் ரசிக்கவைத்துள்ளது “வல்லவன் வகுத்ததடா ” திரைப்படம் இன்றைய மனிதர்களின் வாழ்க்கை முறை கொண்டு சிறப்பாக படம் ஆக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு பணம் தான் முக்கியம் என்று பயணிக்கும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
ஆறாவது நபர் அனைவர்க்கும் “கர்ணன்” போல் நலத்தை செய்கிறார் கலியுகத்தில் அவருக்கு என்ன நடக்கிறது என்பதும் ,இந்த ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது ஆறு கதாபாத்திரங்கலின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை, விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாக திரையில் ரசிக்கும் படி “வல்லவன் வகுத்ததடா ” படத்தின் திரைக்கதை.
தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர்கள்
கதாபாத்திரத்திற்கேற்றார்போல சிறப்பாக நடித்துள்ளனர்.
திரையில் காட்சிகள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாக ரசிக்கும் படி இருக்கிறது, குறிப்பாக பணத்திற்காக கஷ்ட்டப்படும் நாயகிக்கு பணம் எந்த வகையில் கிடைக்கும், போன்ற கட்சியும் எளிமையான ஒரு விசயத்தை திரையில் ரசிக்கும் படியாக கொடுத்துள்ளது தனி சிறப்பு .
ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து கதைக்கு ஏற்ப தனது ஒளிப்பதிவை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசை மற்றும் பின்னணி இசையை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்