டபுள் டக்கர் திரை விமர்சனம்-indiastarsnow.com

டபுள் டக்கர் திரைப்படம் வெளியாகி மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது வருகிறது ஆர்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மீரா மஹதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ் பாஸ்கர், காளி வெங்கட், முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், ஷா ரா, சுனில் ரெட்டி, கருணாகரன் என ஏகப்பட்ட திரைப் பிரலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யா சாகர் இசையமைத்துள்ளார்.
அரவிந்த் தனது தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்து அனாதையாகிறார் மற்றும் சிறுவயதில் முகத்தில் ஏற்பட்ட தீக்காயத்தின் தழும்பால் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறார் அரவிந்த் (தீரஜ்). அரவிந்த்தின் காதலை பாரு (ஸ்மிருதி வெங்கட்) ஏற்றுக்கொள்ள, அவரின் வீட்டிற்கு வருகிறார். அப்போது “காட்’ஸ் ஆர்மி” என்கிற உலகத்திலிருந்து வரும் “ரைட் முனீஷ்காந்த்தின் “குரல் “, “லெஃப்ட் காளி வெங்கட்டின் “குரல்” என்ற தேவதை பொம்மைகள் இரண்டும் சேர்ந்து, அரவிந்த்தின் வாழ்நாள் முடிந்துவிட்டதாகத் தவறுதலாக நினைத்து, அவரின் உயிரை எடுத்துவிடுகின்றன. எதிர்பாராதவிதமாக அரவிந்த்தின் சடலமும் காணாமல் போகிறது.
தற்காலிகமாக, அரவிந்த்தின் உயிரானது, அவரைப் போலவே, அதேநேரம் முகத்தில் தழும்பற்று இருக்கும் ராஜா (தீரஜ்) என்பவரின் உடலுக்குச் செல்கிறது. ராஜாவிற்குள் இருக்கும் அரவிந்த், லெஃப்ட், ரைட் ஆகியோர் சேர்ந்து, தொலைந்த சடலத்தைத் தேடி கண்டுபிடிக்கப்படாத ? அரவிந்த்தும் பாருவும் காதல் இணைந்தது ? போன்ற கேள்விகளுக்கான பதிலை காமெடி கலாட்டாவாக திரையில் கலக்கும் இந்த ‘டபுள் டக்கர்’. (யெஸ்! அதே ‘அதிசயப் பிறவி’ வைப்ஸ்தான்!)
டபுள் டக்கர் படம் தொடங்கியதில் இருந்தே நகைச்சுவையாக திரையில் ரசிக்கும் (சிரிக்கும் ) படியாக “ரைட் முனீஷ்காந்த்தின் “குரல் “, “லெஃப்ட் காளி வெங்கட்டின் “குரல்” கதாப்பாத்திரங்களில் இடையிடையில் திரைக்கதை சிறப்பாக அமைந்துள்ளது . இந்தக் காட்சிகளுக்கு, சிம்பயாசிஸ் டெக்னாலஜிஸின் அனிமேஷன் திரையில் ரசிக்குப்படியாக பலம் சேர்த்துள்ளது .