அதோமுகம் திரை விமர்சனம்-indiastarsnow.com

ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘அதோமுகம்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுனில் தேவ்.
இதில் எஸ்.பி சித்தார்த், சைதன்யா பிரதாப், அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின், அருண்பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு குடும்பம் தவம் போல் இருந்து 3000 ஏக்கர் தேயிலை தோட்டத்தை கைப்பற்றினார்களா என்பது தான் ஒன் லைன் .
ஊட்டியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் நாயகன் மார்ட்டின் ( எஸ். பி. சித்தார்த்). அவரது மனைவி லீனா( சைதன்யா பிரதாப்) இல்லத்தரசியாக நடித்துள்ளார் . மார்ட்டின் பள்ளிப்பருவ தோழி (காதலி) மனைவியை அதிகமாக நேசிக்கும் மார்டின்- மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க தீர்மானிக்கிறார். அதை மனைவி எளிதில் யூகித்து விடுவதால்.. என்றாவது ஒரு நாள் உமக்கு இன்ப அதிர்ச்சியை வழங்குவேன் என்கிறார் நாயகன் மார்ட்டின். தன்னுடைய நண்பனின் ஆலோசனையின் படி மனைவின் கைபேசியில் உளவு மென்பொருள் செயலி ஒன்றை அவளுக்கு தெரியாமல் பதிவிறக்கம் செய்கிறார் அதன் மூலம் அவளின் நுட்பமான பாவனைகளை பதிவு செய்து அவளுக்கு பரிசாக வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மார்ட்டின் செய்யும் பொது அவனுக்கு எதிராக திரும்புகிறது. அந்த செயலியின் மூலம் தனது நண்பர், அவரது தந்தை மற்றும் தன் மனைவியின் மற்றொரு முகத்தை அவர் காண நேர்கிறது. அதன் விளைவாக தன்னை போலீசில் கொலையாளி என்று முத்திரை குத்தி அவரை ஜெயிக்கு அனுப்புகின்றனர் அவர்கள் யார் ? தனக்கும் எதிராக எதிராகசெயல்படுபவர்களை பழிதீர்த்தர என்பதே ?
மற்றும் எதிரிக்கு (அவர்கள் கொடுத்த )அதே அதிர்ச்சியை பரிசாக கொடுத்தாரா என்பதே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை “அதோ முகம்”.
மார்ட்டின் கதாபாத்திரத்தில் நடிகர் அருண்பாண்டியனின் சகோதரி மகன் எஸ். பி. சித்தார்த் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு திரையில் ரசிக்கும் படியாக உள்ளது குறிப்பாக அவரது அப்பாவியான முக தோற்றம் திரை கதைக்கு சிறப்பாக பொருந்தியுள்ளது திரையில் அவர் நடிப்பு தனி சிறப்பு .
இந்த கதாபாத்திரத்தை சுற்றி திரைக்கதையின் மர்ம முடிச்சுகளை போட்டு, அதை நேர்த்தியாக விடுவித்திருப்பதிலும், குறைவான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லரை வழங்கி இருப்பதற்காகவும் இயக்குநரை பாராட்டலாம்.
நாயகி லீனா வேடத்தில் நடித்திருக்கும் நடிகை சைதன்யா பிரதாப்பும் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் பதிகிறார்.
சிறப்பு தோற்றத்தில் சிறை கைதியாக நடிகர் அருண்பாண்டியனின் நடிப்பும் பிரமாதம் சிறைக்குள் இருந்துகொண்டு அவர் நாயகனுக்கு உதவி செய்வது திரை கதைக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதால், அருண்பாண்டியனின் கதாபாத்திரம் திரையில் பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைக்கிறது.
சித்தார்த்தின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், அவரது தந்தையாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், என அனைத்து நடிகர்களும் தங்களது நடிப்பால் திரையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
திரைப்படம் தொடக்கத்தில் இருந்து யூகிக்க முடியாத திருப்பங்களை தொடர்ச்சியாக திரை கதையாக அமைத்து ரசிகர்களை திணறடித்துள்ளார் இயக்குநர் சுனில் தேவ்.
திரை கதைக்கு பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. ஊட்டி மலைப்பகுதி இப்படத்தின் கதைக்களமாக அமைந்திருந்தாலும் மலை பகுதியின் அழகியல் காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவாளர் அருண் விஜயகுமார், கதையோட்டத்திற்கு தேவையான அளவில் பயணித்திருப்பது திரைக்கதைக்கு வலுவூட்டுகிறது.