பைரி திரை விமர்சனம்-indiastarsnow.com
“பைரி” என்றால் பந்தைய புறாக்களை வேட்டையாடும் கழுகு இனத்தின் பெயர் தான் திரைப்படத்தின் தலைப்பு “பைரி”.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மக்களின் வாழ்வியலை “நாகர்கோவில் மக்களின் மொழி மற்றும் ஐயா வழிபாடு ,கிறிஸ்துவர்கல் மற்றும் நாகர்கோவில் மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக சொல்லியிருப்பதோடு”, புறா பந்தயத்தின் பின்னனியை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்த பைரி பாகம் 1.
நாயகன் ராஜலிங்கம் (சையது மஜீத்) குடும்பம் நான்கு தலைமுறையாக புறா பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அனல் சையத் மஜித் அம்மா தனது மகன் படித்து மிக பெரிய மனிதனாக வேண்டும் என்பதே அவர் ஆசை அனல் நாயகன் சையத் மஜித் கல்லுரி படிப்பில் ஹரியார் வைத்துவிடு வெட்டியாக ஊர் சுத்துகிறார் மற்றும் தனது பள்ளி பருவ நண்பனுடன் இணைத்து பந்தைய புறா வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார் நாயகன் புறா பந்தயத்தில் கலந்துகொள்கிறார் அப்போது . ஊரில் பெரிய ரவுடியாக வலம் வரும் வினு லாரன்ஸும் புறா பந்தியத்தில் கலந்து கொண்டு வினு லாரன்ஸ் செய்யும் மோசடியை சையத் மஜித் கண்டுபிடித்து தட்டிக்கேட்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட நாயகன் ராஜலிங்கம் நிலைமை என்னவானது ?ராஜலிங்கம் உயிர் நண்பன் அமல் (ஜான் கிளாடி) நிலைமை என்னவானது போன்ற கேள்விக்கு நாகர்கோவில் மக்களின் வாழ்வியலோடு பதில் சொல்லும் படம் தான் ‘பைரி’.
லிங்கத்தின் உயிர் நண்பன் அமல் (ஜான் கிளாடி) புறாக்களை வளர்த்து பந்தய புறா என்று போய் விற்பனை செய்வதில் கில்லாடி.சுயம்பு என்ற வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வினு லாரன்ஸ், நாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் என திரையில் அனைவரும் ரசிக்கும் படியாக உள்ளது .புறா பந்தய இறுதி காட்சி கிராபிக்ஸ் உதவியோடு புறா பந்தயங்கள் காட்சி திரையில் ரசிக்கும் படியாக உள்ளது .
அருண் ராஜ் இசையில் பாடல்கள் பெரியதாக ரசிக்கும் படி இல்லை . “ஆனால், பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது” . வசந்தகுமாரின் (Crown shot ) மிக சிறப்பு ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் நாகர்கோவில் மக்களின் வாழ்வியலையும் புறாக்களையும் அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.”,