மதிமாறன்' -விமர்சனம்
ஜிஎஸ் சினிமா தயாரிப்பில் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கி உள்ள படம் மதிமாறன். இந்த படம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளும் நரேன், பாவா செல்லத்துரை என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் கிராமத்தில் தபால்காரராக இருக்கிறார் எம் எஸ் பாஸ்கர். இவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கிறது அதில் ஒருவர்
உடல் வளர்ச்சி இன்றி பிறக்கிறார் அவர்தான் வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்), மற்றொருவர் இவானா (மதி).
நெடுமாறன் உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார். இதனால், பலரும் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.எதை பற்றியும் கவலை படாமல் தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறார். திருநெல்வேலி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் இவரது அக்கா இவானா கல்லூரி பேராசிரியருடன் ஓடி விடுகிறார், இதனால் அவரது அப்பா எம்எஸ் பாஸ்கர் மற்றும் அம்மா இருவரும் தற்கொலை செய்து விடுகிறார். இதன்பிறகு தனது அக்காவை தேடி சென்னைக்கு செல்கிறார் வெங்கட். அங்கு தொடர்ச்சியாக பல மர்ம மரணங்கள் நிகழ்கிறது அதை எப்படி வெங்கட் கண்டுபிடிக்கிறார் என்பதை மதிமாறன் படத்தில் கதை.
குள்ளமாக இருப்பவர்களை கிண்டல் செய்யும் வழக்கம் பல இடங்களில் இருந்து வருகிறது, அதை நாம் கண்ணெதிரே பார்த்தும் இருப்போம். அப்படி ஒரு பிரச்சனை உள்ள நபரை வைத்து ஒரு முழு படத்தை எடுத்துள்ள இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியனுக்கு பாராட்டுக்கள். குள்ளமாக இருப்பதால் ஒருவர் என்னென்ன கேலி கிண்டலுக்கு ஆளாகிறார் என்பதை படம் முழுக்க காட்டியுள்ளார். மேலும் அதை வைத்து கதை, திரைக்கதையை சுவாரசியமாக எடுத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள வெங்கட் செங்குட்டுவன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், படத்தை தனது தோள்களில் சுமந்து செல்வதும் வெங்கட் தான். நடிப்பு, நடனம் “தனக்கு தெரிந்தவர் இறந்துபோக அதனை தனது புத்திசாலித்தனமா கண்டுபுடிக்குக்ம் கட்சி திரையில் சிறப்பு” “கல்லூரி நிகச்சியில் அவர் உயரத்துக்கு ஏற்றவாறு இடத்தை மாற்றி நடனம் ஆடும் பொது திரையில் ரசிக்க வைக்கிறார் நெடுமாறன் ” .
கதாநாயகியாக நடித்து வரும் இவானா இந்த படத்தில் ஒரு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார் இவானா. மேலும் போஸ்ட் மாஸ்டராக வரும் எம்எஸ் பாஸ்கர், போலீசாக வரும் ஆடுகளம் நரேன், செக்யூரிட்டியாக நடித்துள்ள பாவா செல்லதுரை என அனைவரும் நல்ல பெர்பார்மன்சை வழங்கி உள்ளனர். படம் ஒரு கட்டத்தில் இன்வெஸ்டிகேஷன் திரில்லருக்கு மாறுகிறது. அங்கிருந்து திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது.
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது . இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தில் முதல் பாதி அடுத்தடுத்த திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக செல்கிறது, அதே சமயத்தில் இரண்டாம் பாதியில் திரைக்கதை மேலும் படம் முழுக்க வரும் டயலாக்குகளும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. மதிமாறன் படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.