"பைட் கிளப்" திரை விமர்சனம்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ன் ஜி ஸ்குவாட் நிறுவனத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் “பைட் கிளப்” ஆதித்யா என்பவர் “பைட் கிளப்” படத்தை தயாரித்துள்ள . பைட் கிளப் படத்தில் நாயகனாக விஜயகுமார் நடித்திருக்கிறார். சென்னை அருகில் உள்ள பழவேற்காடு பகுதியை கதைக்களமாக கொண்டு “பைட் கிளப்” படத்திற்கு “சசி எழுதியுள்ளா கதைக்கு” இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ளார் .
“பைட் கிளப்” படத்தில் பெஞ்சமின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் (கார்தேகேயன் சந்தானம்) மற்றும் அவரது நண்பர்கள் வடசென்னையின் அடுத்த தலைமுறையினர் விளையாட்டு வீரர்களாக மாற வேண்டும், ரவுடிசம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது என்று விரும்புகிறார்கள்,
கதாநாயகன் செல்வாவை [விஜய் குமார்] சிறு வயதிலேயே கால்பந்து விளையாட்டில் சிறந்த விளையாட்டுவீரானக உள்ளார் இவரை பெரிய கால்பந்து வீரனாக மாற்ற வேண்டும் என நினைக்கிறார் குத்துச்சண்டை வீரரான கார்த்திகேயன் சந்தானம் “பெஞ்சமின்” , நாயகனின் குடும்பச் சூழல் குடிகார அப்பா ,சிறிய உணவகம் நடத்தும் அம்மா என தனது ஏழ்மையை நிலை உணர்த்து குத்துச்சண்டை வீரரான “பெஞ்சமின்” நாயகனின் பயிற்சிக்கு 50 ஆயிரம் தேவைப்டுகிறது அதனை தானே கொடுப்பதாகவும் அதனை நாளை காலை வந்து பெற்றுக்கொள் என்று “பெஞ்சமின்” நாயகனிடம் சொல்கிறார் பின்பு தனது தாயின் தாலி செயினை அடகு வைக்க “பெஞ்சமின்” தேட அப்போது தனது தம்பி (அவினாஷ்)ஜோசப் எடுத்துள்ளதை உணர்கிறார் அப்போது தனது தம்பியிடம் விசாரிக்கும் பொது தனது தம்பியையும், கிருபாகரனையும் அடித்துவிடுகிறார் பெஞ்சமின்.
கஞ்சா வியாபாரம் செய்ய இடையூறாக இருக்கும் தனது அண்ணன் என்றும் பார்க்காமல் (சங்கர் தாஷ்) கிருபாகரனுடன் இணைந்து பெஞ்சமினை கொலை செய்கிறார் ஜோசப்.அப்போது கிருபாகரன் எனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது அதனால் உன்னை ஒருவரத்தில் ஜாமினில் எடுப்பதாக சொல்லி போலீசில் சரணடைய சொல்கிறார் (சங்கர் தாஷ்)கிருபாகரன் அதனால் ஜோசப் போலீசிடம் சரணடைகிறார் (அவினாஷ்)ஜோசப்.அவினாஷ் சிறைக்கு போக, மறுபக்கம் சங்கர் தாஷ் லோக்கல் அரசியல்வாதியாக வளர்ந்து அந்த பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். சங்கர் தாஸால் ஏமாற்றப்பட்ட (அவினாஷ்) ஜோசப் 12 ஆண்டுகள் கழித்து வெளியே வருகிறார்.
பழிவாங்க நினைக்கிறார். அதற்காக நாயகன் விஜய் குமாரை பகடை காயாக பயன்படுத்த, அதன் பிறகு என்ன நடந்தது?, விளையாட்டு வீரராக நினைத்த நாயகன் விஜய் குமாரின் வாழ்க்கை என்னவானது ? பெஞ்சமின் கொன்றவரை நாயகன் என்னசெய்தற் என்பதையும் திரையில் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது இந்த ‘ஃபைட் கிளப்’.
‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தில் போதை, புகை, வெட்டுக்குத்து என சிறப்பாக திரையில் தெறிக்கவிட்டுள்ளார் திரைக்குழுவினர், கிருபாவாக வரும் சங்கர் தாஸும் இயல்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் சங்கர் தாஸ். பெஞ்சமினாக வரும் கார்த்திகேயன் சந்தானம், ரஸாக் ஆக வரும் வடசென்னை அன்பு, கார்த்தியாக வரும் சரவணவேல், உதயாவாக வரும் சார்பட்டா சாய் தமிழ் என எல்லோருமே சிறப்பான நடிப்பின் மூலம் திரை கதைக்கு உயிர்கொடுத்துள்ளார்.
கதையின் நாயகன் விஜய் குமார்,ஆக்ரோஷமான இளைஞராக திரையில் களம் இறங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சியில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார் பெஞ்சமின் கொன்ற இருவரை கொள்ளும் கட்சி திரையில் மிகவும் சிறப்பு.
கதாநாயகியாக நடித்திருக்கும் மோனிஷா மோகனும், அவரது கதாபாத்திரமும் தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும், அவரது காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரிட்டோவின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பு திரையில் ரசிக்கும்படியாக உள்ளதும் கதைக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவு செய்திலத்து ரசிக்கும்படி உள்ளது படத்தில் முதல் கட்சி steady shot camera ,crown camera shot super,பேருந்து சண்டைக்காட்சி, கல்லூரியில் நடக்கும் சண்டைக்காட்சி, என்று பல வகையான சண்டைக்காட்சிகளை பல கோணங்களில் காட்சிப்படுத்தி திரையில் ரசிக்கவைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரிட்டோ.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மற்றும் பீஜியம் திரை கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.