Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் மற்றும் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சுதா கொங்கரா ஓ வுமெனியா! அறிக்கை 2023-யின் பின்னணியில் இந்திய பொழுது போக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு அவர்களுடைய ஆதரவு அளிப்பதாக உறுதி மொழி அளித்தனர்

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் மற்றும் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சுதா கொங்கரா ஓ வுமெனியா! அறிக்கை 2023-யின் பின்னணியில் இந்திய பொழுது போக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு அவர்களுடைய ஆதரவு அளிப்பதாக உறுதி மொழி அளித்தனர்

Posted on October 27, 2023

ஆலியா பட், தகுபட்டி சுரேஷ் பாபு, சுப்ரியா மேனன், சுப்ரியா யார்லாகாட்டா, ஷோபு யார்லாகாட்டா, விக்ரமாதித்யா மோட்வானே, மற்றும் அதிகமான பொழுதுபோக்கு ஆளுமைகள் இந்த துறையில் பன்முகத்தன்மைக்கான அவர்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்

ஆர்மேக்ஸ் மீடியா மற்றும் ஃபிலிம் கம்பானியன் தலைமை வகிக்க , மற்றும் ப்ரைம் வீடியோ ஆதரவளிக்கும் ஓ வுமேனியா! இந்திய பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவம் குறித்த இந்தியாவின் மிக முழுமையான அறிக்கை ஆகும்

முழு அறிக்கையை இங்கே படிக்கலாம் www.owomaniya.org

சென்னை- அக்டோபர் 26,2023 – இந்தியாவின் மிகவும் நேசிக்கப்படும் பொழுதுபோக்கு இடமான ப்ரைம் வீடியோ, இந்திய பொழுதுபோக்கில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த மிக முழுமையான அறிக்கையான இன்று ஓ வுமெனியா! அறிக்கையின் சமீபத்திய பதிப்பை வெளியிட்டது. மீடியா ஆலோசனை நிறுவனமான, ஆர்மேக்ஸ் மீடியா, இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ப்ளாட்ஃபார்ம் ஆன , ஃபிலிம் கம்பேனியானால் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் உருவாக்கப்பட்டு மற்றும் ப்ரைம் வீடியோவின் ஆதரவு பெற்ற இந்த ஆய்வு இந்தியாவின் பொழுதுபோக்கு தொழிலுக்குள் உள்ளடக்க தயாரிப்பு, மார்கெட்டிங் மற்றும் கார்பரெட் தலைமையின் வெவ்வேறு முகங்களில் பெண்களின் பயணம் குறித்த புள்ளி விவரங்களை மதிப்பிடுகிறது.

இந்த அறிக்கையின் பின்னணியில், இந்த துறையைச் சேர்ந்த வெவ்வேறு தலைவர்கள் அவர்களுடைய ஆதரவை தெரிவித்தனர் மற்றும் பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டர். திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் கூறினர், “எங்களுடைய செயல் திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு, எழுத்தாளர் அறைகளில் பெண்களை தொடர்ந்து சேர்ப்பதற்கு மற்றும் அரசாங்கம் கட்டாயமாக்கிய பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுவதற்கு மற்றும் நிறுவனத்திற்குள் ஒரு ஐசிசி கொண்டிருப்பதற்கு நாங்கள் உறுதி மொழி எடுக்கிறோம்.” அவருடைய ஆதரவிற்கான உறுதி அளிக்கையில், இயக்குனர் மற்றும் திரை எழுத்தாளரான சுதா கொங்காரா கூறினார்,” என்னுடைய தயாரிப்பாளர்கள் அரசாங்கம் கட்டாயமாக்கியிருக்கும் பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை மற்றும் அவர்களுடைய இடத்தில் ஒரு ஐசிசி கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு நான் உறுதி மொழி ஏற்கிறேன்.”

பெண்-முன்னணி வகித்த திரைப்படமான கங்குபாய் காத்தியாவாடிக்காக சமீபத்தில் தேசிய திரைப்பட விருதை வென்ற மற்றும் மற்றொரு பெண்களை –முன்னே வைக்கும் கதை அமைப்பான டார்லிங்குடன் தயாரிப்பாளர் ஆகவும் மாறியிருக்கும் ஆலியா பட் கூறினார், “என்னுடைய தயாரிப்பு திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன். அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் மற்றும் எக்சிக்யூட்டிவ் டைரக்டர் சுப்ரியா யார்லாகாட்டா கூறினார், “தெலுங்கு திரைப்பட துறையில் ஒரு ஐசிசி-ஐ நிறுவிய முதல் ஸ்டூடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் அன்னபூர்ணா ஆகும். எங்களுடைய தயாரிப்புகளில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கு மற்றும் எழுத்தாளர் அறைகளில் பெண்களை சேர்ப்பதற்கான எங்களுடைய முயற்சியை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். எங்களுடைய சூழல், பணியிடத்தில் அதிகமான பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது”. அபர்ணா புரோஹித், ஒரிஜினல்ஸ் தலைவர், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா , ப்ரைம் வீடியோ, உறுதி எடுத்துக் கொண்டார், “எழுத்தாளர் அறையில் பெண்களை சேர்ப்பதற்கு மற்றும் எங்களுடைய தயாரிப்புகள் அனைத்திலும் துறைத் தலைவர்களாக குறைந்தபட்சம் 30% பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நோக்கி பணியாற்றுவதற்கு நான் உறுதி அளிக்கிறேன் .”

அனைத்து உறுதி மொழிகளையும் இங்கே பார்க்கலாம்: https://drive.google.com/drive/folders/1l9S6ENy3KWnZcxfRuyuBmmaEEiG1zbPQ

2021 -லிருந்து இந்த தொழில் பார்த்திருக்கும் மாற்றம் குறித்த முழுமையான ஒரு கண்ணோட்டத்தை அடைவதற்கு, இந்த வருடம், 2022 ல் 8 இந்திய மொழிகளில் (ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி மற்றும் குஜராத்தி) ஸ்ட்ரீம் செய்யப்பட்ட மற்றும் தியேட்டரில் வெளியிடப்பட்ட 156 திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்த அறிக்கை ஆய்வு செய்தது,

ப்ரைம் வீடியோவுடன், க்ளீன் ஸ்லேட் ஃபில்ம்ஸ், எம்மே என்டர்டெய்ன்மென்ட், எக்செல் என்டர்டெய்ன்மென்ட், ஜியோ ஸ்டூடியோ, ப்ரொட்யூசர்ஸ் கில்டு இண்டியா, ஆர்எஸ்விபி , சோனிலைவ், டைகர் பேபி மற்றும் ஸீ5 உட்பட இந்த தொழிலைச் சேர்ந்த மற்ற பார்ட்னர்களால் இந்த அறிக்கைக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது .

இந்த அறிக்கையின் முக்கிய கண்டு பிடிப்புகளில் பின்வருபவை உள்ளடங்கும்:

• படைப்பாற்றல் திறன் – இயக்கம், ஒளிப்பதிவு, எழுத்து மற்றும் உற்பத்தி டிசைனின் முக்கிய துறைகளில் 780 ஹெச்ஓடி பதவிகளில் 12% மட்டுமே பெண்கள் பதவி வகித்தனர் .

• உள்ளடக்க விஷயம் – 2021-ல் , ஆய்வு செய்யப்பட்ட பொருட்களில் (திரைப்படங்கள், தொடர்களில்) 55% பெக்டெல் டெஸ்டை பாஸ் செய்தது, இப்போது அந்த எண்ணிக்கை பாதி அளவிற்கு கீழே 47% -க்கு சென்று விட்டது, மற்றவைகள் இடையே கில்ட்டி மைன்ட்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்! சீசன் 3, டெல்லி க்ரைம் சீசன் 2, மாஜா மா, கங்குபாய் காத்தியாவாடி பெக்டெல் டெஸ்டை பாஸ் செய்வதற்கு அதிகபட்ச சீன்கள் கொண்ட பொருட்களாக (திரைப்படங்கள், தொடர்களாக) வெளி வந்தன.

• மார்கெட்டிங் – ட்ரெய்லர்களில் 27% டாக் டைம் மட்டுமே இன்னமும் பெண்களுக்கு கிடைக்கிறது, இந்த எண்ணிக்கை ஸ்ட்ரீம் செய்யப்படும் திரைப்படங்களுக்கு மிக அதிகமாக உள்ளது, இதில் ட்ரெய்லர்களில் 33% டாக் டைம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மற்றவைகள் இடையே, ஹஷ் ஹஷ், கெஹராயியான், த ஃபேம் கேம், அம்மு, அ தர்ஸ்டே, சீத்தா ராமம், டிரெய்லர்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு குறைந்தபட்சம் 50% டாக் டைமுடன் சிறந்த செயல்திறன் கொண்டிருந்தது

• நிறுவன திறமை – இந்தியாவில் 25 முதன்மையான எம்அண்டுஇ நிறுவனங்களில் உள்ள 135 டைரக்டர் / சிஎக்ஸ்ஓ பதவிகள் ஆய்வு செய்யப்பட்ட போது, 13% பெண்கள் மட்டுமே அந்த பதவியை வகித்தனர்.

ஓ வுமெனியா!-வின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்த அவருடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில், ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனர் மற்றும் சிஇஓ ஷைலேஷ் கபூர், கூறினார் “சில முக்கிய அம்சங்களில் மெதுவான ஆனால் நிலையான முன்னேற்றம் இருந்திருந்தாலும், அனைவரையும் உள்ளடக்குவதை ஒரு தீவிர கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கான தேவையை இந்த அறிக்கை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. இந்த அறிக்கையின் முந்தைய பதிப்பை போல, ஸ்ட்ரீமிங் தொடர்ந்து பெண் பிரதிநிதித்துவத்திற்கான பாதையை வகுத்து வருகையில், சற்று குறைவான செயல்திறன் கொண்ட நாடகம் போன்ற திரைப்படங்கள் இந்த தொழிலில் உள்ளவர்களை எழுப்புவதற்கான அழைப்பாக திகழ வேண்டும். சாதகமான ஒரு மாற்றத்தை பார்ப்பதற்கான உண்மையான விருப்பதிற்கு முக்கியத்துவம் அளித்து, இந்த துறை இந்த டேட்டாவை கவனத்தில் கொள்வதை மற்றும் சிறப்பான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு ஒன்றாக வருவதைப் பார்ப்பதற்கு நான் மிகழ்ச்சி அடைகிறேன் .

இந்த அறிக்கை பற்றி பேசுகையில், ஃபிலிம் கம்பானியன் நிறுவனர் மற்றும் எடிட்டர் அனுபமா சோப்ரா கூறினார், “பொழுதுபோக்கு சக்தி வாய்ந்த ஒரு மீடியம் , இது அனைவரையும் உள்ளடக்குவது மற்றும் பன்முகத்தன்மையை முன்நிலைப்படுத்த வேண்டும். ஓ வுமெனியா! முன்னை விட வேகமாக நகரச் செய்வதற்கான எங்களுடைய முயற்சி ஆகும். இந்த உரையாடலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முக்கிய தனிநபர்கள் குறிப்பிட்ட இலக்குகளை ஏற்று வேலை செய்வது மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் இந்த துறையிலிருந்து அற்புதமான பங்கேற்பை பார்ப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட படிகள் சிறியதாக தோன்றலாம் ஆனால் ஒவ்வொரு படியும், ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானது, மற்றும் ஓ வுமெனியா! அறிக்கையின் ஒவ்வொரு பதிப்புடனும், அதிக சமநிலையான ஒரு சூழலுக்கு ஒரு அடி நெருக்கமாக நாங்கள் நகர்வதாக நாங்கள் நம்புகிறோம். இந்த தனித்தன்மையான முயற்சிக்காக எங்களுடன் இணைவதற்காக ப்ரைம் வீடியோ மற்றும் ஆர் மேக்ஸ் மீடியாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“ப்ரைம் வீடியோவில் , பன்முகத்தன்மை, சமநிலை மற்றும் அனைவரையும் உள்ளடக்குவது தேவையானது மட்டும் அல்ல, இது அவசியமானது என நாங்கள் நம்புகிறோம். ஒரு நிறுவனமாக, நாங்கள் எப்போதுமே சமநிலையான பிரதிநிதித்துவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், ப்ரைம் வீடியோ மற்றும் எங்களுடைய உள்ளடக்க விஷயத்தில் மட்டும் அல்ல, ஆனால் பரவலாக படைப்புத் தொழிலுக்குள்ளும் அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய தொழிலுக்குள் திறமை மிக்க பெண்களை வளர்ப்பது மற்றும் அதிகாரம் அளிப்பதன் மூலமாக, எங்களால் பரவலான சுற்றுப்புறச் சூழல் அமைப்பில் சாதகமான மாற்றத்தின் சிற்றலை விளைவை (தொடர்ச்சியான சிறு மாற்றங்களை) உருவாக்க முடியும் என்று சொன்னார் அபர்ணா புரோஹித் , ஹெட் ஆஃப் ஒரிஜினல்ஸ், இண்டியா மற்றும் தென் கிழக்கு ஏசியா, ப்ரைம் வீடியோ. “ஓ வுமெனியா! இந்த துறையை இணைப்பதற்கு மற்றும் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைப்பதற்கு ஒன்றிணைந்த முயற்சியை பிரதிபலிக்கிறது. இந்த அறிக்கையின் சமீபத்திய பதிப்பு, மாற்றம் ஏற்படுத்தும் இந்த முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கான அவசரத்தை அடிக் கோடிடுகிறது. பார்ட்னர்களின் உறுதியான ஆதரவை மட்டும் அல்லாமல், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் உட்பட இந்த துறையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்களின் தீவிர பங்கேற்பையும் காண்பது இதயத்தை மகிழ்விப்பதாக உள்ளது. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட அர்ப்பணிப்பை உறுதி அளிப்பது மட்டும் அல்லாமல் அதிக அளவில் பெண்களை உள்ளடக்குவதற்கு ஆதரவளிப்பதற்கு பரவலாக நிறுவன அளவிலான அர்ப்பணிப்புகளுக்கும் அவர்கள் உறுதி அளித்தனர்.”

11985 ல் ஆலிசன் பெக்டெல்லால் கருத்துருவாக்கப்பட்ட த பெக்டெல் டெஸ்ட், உள்ளடக்க விஷயங்களில் பாலின பிரதிநிதித்துவத்திற்கு சர்வதேச அளவில்-ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகோலாக பார்க்கப்படுகிறது. ஒரு திரைப்படத்தில் இரண்டு பெயரிடப்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் பேசிக் கொள்ளும் ஒரு சீன் உள்ளது, மற்றும் அந்த உரையாடல் ஆண்கள் / ஒரு ஆண் தவிர வேறு ஏதாவது விஷயம் பற்றியது என்றால் அந்த திரைப்படம் பேக்டெல் டெஸ்டில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுகிறது. தொடர்கள் நீண்ட நேரம் ஓடும் என்பதால், தொடர்களை ஸ்ட்ரீம் செய்வதற்கு, மூன்று சீன்களை உள்ளடக்குவதற்கு விதி மாற்றம் செய்யப்பட்டது .

2ட்ரெய்லர் டாக் டைம் என்பது தனித்தன்மையாக ஓ வுமேனியா! –விற்காக உருவாக்கப்பட்டது. இந்த பரிசோதனையில், ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கப்படும் பேசும் நேரம் வாரியாக, திரைப்படத்தின் அல்லது தொடரின் முக்கிய ட்ரெய்லர் ஆய்வு செய்யப்படும் மற்றும் வகைப்படுத்தப்படும். இந்த பரிசோதனை, பெண் கதாபாத்திரங்களுக்கு சொந்தமான பேசும் நேரத்தின் % -ஐ அறிக்கையாக அளிக்கிறது. இந்த பரிசோதனை உள்ளடக்க விஷயங்களை தயாரிப்பாளர்கள் மற்றும் ப்ளாட்ஃபார்ம்கள் எப்படி மார்கெட் செய்வது என்பது குறித்த ஒரு கருத்தை அளிக்கிறது. 73 % ட்ரெய்லர் டாக் டைம் ஆண் கதாபாத்திரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் முடிவுகள் அவர்களுடைய மார்கெட்டிங்கில் ஆண் கண்ணோட்டத்திலிருந்து திரைப்படங்கள் நிலைப்படுத்தப்படுவதாக ஆலோசனை அளிக்கிறது.

  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
  • “Getting to Portray a Character with Emotional Depth Is a Boon for an Upcoming Artiste Like Me” – Actress Vijayalakshmi Veeramani on ‘Enna Vilai’
  • உணர்வுகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற வளர்ந்து வரும் கலைஞருக்கு கிடைத்த வரம்”… ‘என்ன விலை’ திரைப்படம் குறித்து நடிகை விஜயலட்சுமி வீரமணி!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme