Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
இறைவனின் திருப்தியையும், அருளையும் நமக்குப் பெற்றுத் தரும் ஒரு அற்புதமான செயல்.

இறைவனின் திருப்தியையும், அருளையும் நமக்குப் பெற்றுத் தரும் ஒரு அற்புதமான செயல்.

Posted on July 30, 2023

ஏழை, எளியோருக்கு தர்மம் செய்வது,இறைவனுக்கு நாம் கொடுக்கும்
“அழகிய கடன்” என்பது வேத வாக்கு.

ஒவ்வொரு தனி மனிதனும்
தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தர்மத்திற்காக என்று
ஒதுக்கி, அதை ஒரு கடமையாகச் செய்வது,
உலகத்தின் வறுமை ஒழிப்புக்கான தத்துவம்.

தர்மம் செய்வதை, முதலில் நம் தெருவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

நம்மைச் சுற்றி இருப்போரில் பலர்,
வறுமையால் வாடியும், யாரிடமும் வாய்
திறந்து கேட்காமல், மானத்துக்கு அஞ்சி,
வேதனையில் உழன்று கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களை நாம் கண்டறிந்து,மூன்றாம் மனிதருக்குத் தெரியாமல்
உதவ வேண்டும். அது தான்,
உண்மையான தர்மம்.

அது தான்,இறைவனுக்கு நாம் கொடுக்கும் அழகிய கடனாகும். இந்தக்கடனை,
இறைவன் நாம் அறியாத வழிகளிலிருந்து, பன் மடங்காக நமக்கு திருப்பித் தருவான்.

தர்மம் செய்வதை, நம் தெருவில் இருந்து
ஆரம்பித்து, அடுத்து வட்டாரம், ஊர்,
மாவட்டம் என்று நம் வசதிக்கு ஏற்பவிரிவு படுத்தி கொள்ள வேண்டும்.

வறுமையில் வாடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தான் நேரடியாக உதவ வேண்டும்.

இதில் மூன்றாம் மனிதர் மூலமாகச் செய்தால், வீண் விளம்பரமாகி, நாம்
செய்த தர்மத்தின் பலன் நமக்கு கிடைக்காததோடு, அந்த மூன்றாம் மனிதர் ஊழல் செய்யவும் நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலாகி விடும்.

எக்காரணத்திற்காகவும்,
சேவை மையங்கள் என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்களிடம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.

அவற்றில் பெரும்பாலானவை
ஏமாற்று மையங்களே.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme