இராவண கோட்டம் திரை விமர்சனம்

இராவண கோட்டம் திரை விமர்சனம்

இயக்கம் – விக்ரம் சுகுமாரன்

நடிப்பு – சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்

தயாரிப்பு – கண்ணன் ரவி

இராமநாதபுரம் மாவட்டம், ஏனாதியைச் சுற்றியுள்ள தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சிறு சிறு கிராமங்கள், அங்கு மேலத் தெரு, கீழத் தெருவில் வசிக்கும் இரு வேறு சமூகத்தினர் பங்காளிகளாகப் பழகி வருகின்றனர்.

இவர்களை இரு சமூகத்து தலைவர்களான பிரபுவும் இளவரசுவும் நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வழிநடத்துகிறார்கள். இதனிடையே கார்ப்பரேட் கம்பெனி ஒன்றை கிராமத்தில் இயற்கை வளத்தை சுரண்ட அனுமதிக்கவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இரு சமூகத்திடையே கலவரத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினரின் முயற்சிகள் அரங்கேறுகின்றன.
சாந்தனு – ஆனந்தி காதல் இதற்கு பகடைக்காயாய் மாற, தண்ணீர் பஞ்சத்தின் மூல வேறான சீமைக் கருவேல மரக்காட்டின் ஆபத்து குறித்து கண்டறிந்து செயல்படும் பிரபுவும் இளவரசுவும் கொல்லப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன?

நல்ல பட்ஜெட்டில், நல்ல நடிகர்களின் நடிப்பில் அனைவரின் உழைப்பும் தெரிகிறது ஆனால் கதை திரைக்கதை காட்சிகள் எதிலும் துளியும் சுவாரஸ்யமில்லை.

தன் நண்பன் சாந்தனுவின் காதலி ஆனந்தியுடன் சூழ்ச்சியால் காதலில் விழும் இடங்களில் பரிதாபத்துக்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறார். இன்னும் கொஞ்சம் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கலாம். ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்குத் தேவையானதை செய்கின்றன.

ஆக்ரோஷமாக கபடி விளையாடுவது, பிரபுவுக்காக கதறி அழும் காட்சிகள், நண்பனிடம் பேச முடியாமல் வருந்தும் காட்சிகளில் சாந்தனு மிளிர்கிறார். இரு சமூகத்து தலைவர்களாகவும் நண்பர்களாகவும் வலம் வரும் நடிகர் பிரபுவும் இளவரசுவும் தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கின்றனர்.

admin