விஸ்வாமித்ரா மற்றும் மேனகாவின் மகளான ஒரு கைக்குழந்தையுடன் கதை தொடங்குகிறது, சொர்க்கத்தில் மனிதர்கள் அனுமதிக்கப்படாததால் தன் தாயால் கைவிடப்படுகிறார் ஆனால் அவரை கன்வ ரிஷி அவளை ஆனால் சகுந்தலா என்ற பெயரை வைத்திருக்கிறார். இந்நிலையில் சகுந்தலா இயற்கை அன்னை மற்றும் காட்டு விலங்குகளால் சூழப்பட்ட ஆசிரமத்தில் வளர்கிறாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, புரு வம்சத்தின் மன்னர் துஷ்யந்த் காட்டில் விலங்குகளைத் துரத்தும்போது தற்செயலாக ஆசிரமத்தின் வளாகத்திற்குள் நுழைந்தார். அப்போதுதான் துஷ்யன் சகுந்தலாவை சந்திக்கிறார், இருவரும் உடனடியாக ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். ஆசிரமத்தில் அவர் சிறிது காலம் தங்கியிருந்த போது, விலங்குகள் மற்றும் இயற்கையின் முன்னிலையில் சகுந்தலாவை துஸ்னியன் திருமணம் செய்து கொள்கிறார். மேலும் தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்பிச் செல்லும் போது அவர் தனது மோதிரத்தை அன்பின் அடையாளமாகக் கொடுத்து, விரைவில் திரும்பி வந்து அவளை அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார்.
பின்னர் சில வருடங்கள் கடந்து செல்கின்றன சகுந்தலா தொடர்ந்து துஷ்யந்திற்காக காத்திருக்கிறாள். அப்படி இருக்கும் நிலையில் தான் ஒரு நாள் துர்வாச மகரிஷி ஆசிரமத்தின் அருகே நாள் கண்ணவ மகரிஷி உள்ளே இருக்கிறாரா என்று கேட்கிறார். துஷ்யந்தனின் எண்ணங்களில் மூழ்கிய சகுந்தலா, துர்வாச மகரிஷி சொல்வதனை கேட்கவில்லை இதனால் அவர் கோபமடைந்து, சகுந்தலாவை துஷ்யந்தின் மனதிலும் உள்ள அவளது நினைவுகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று சாபம் விடுகிறார். இப்படியொரு நிலையில் துஷ்யந்தும் சகுந்தலாவும் மீண்டும் சந்திப்பார்களா? அவர்கள் மீண்டும் இணைத்து வாழ்ந்தார்களா? என்பதுதான் மீது கதை.
