முழுக்க முழுக்க சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர்களை இயக்குனர் தேர்வு செய்திருப்பது சிறப்பான ஒன்று. மேலும், படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சில கதாபாத்திரங்களும் அதில் நடித்து இருக்கும் இளைஞர்களும் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறும் கதையை இயல்பாக காட்டி இருக்கிறது. காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் அதை சுற்றி வசிக்கும் மனிதர்களுடைய வாழ்வை ஒரே வட்டத்திற்குள் கொண்டு வரும் ஒரு சம்பவத்தை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர் பாணியில் இயக்குனர் கொடுத்திருக்கிறார்
மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
காசிமேடு மீன்வியாபாரிகளாகவே மாறி தங்களைக் கவனிக்க வைக்கிறார்கள்.பெற்றோர் இல்லாத அவர்களை சிறு வயதில் இருந்து பாதுகாத்து வரும் வடிவுக்கரசி தங்களது வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.அக்ஷய்கமல், பிரக்யாநாக்ரா,அபிஷேக்சங்கர்,அழகு மற்றும் காவல்நிலைய ஆய்வாளராக வரும் அனுபமாகுமார் ஆகியோர் கவனம் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
காசிமேடு பகுதி வாழ் மக்களை அதிகார வர்க்கம் தம் சுயநலத்துக்காக எவ்வாறு பலி கொடுக்கிறார்கள் என்பதைச் சொல்வதுதான் N4 படம்.
