அயலி வெப் சீரிஸ் – விமர்சனம்

அயலி வெப் சீரிஸ் – விமர்சனம்

பெண் கல்வி, மாதவிடாய், மூடநம்பிக்கை என பெண்கள் குறித்து பேசும் ’அயலி’ தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் பெற்றிருக்கும் வெப் சீரிஸ் ‘அயலி’. இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபி நட்சத்திரா நடித்துள்ளார். இவர்களுடன் லிங்கா, சிங்கம்புலி, அருவி மதன், அனுமோள், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான அடிமைத்தனத்தை பற்றி பேசும் இந்தொடர் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

அயலி வெப் சீரிஸ் 1990களில் நடக்குமாறு உருவாகியுள்ளது, பெண்கள் வயதிற்கு வந்தபின் திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் சாமிக்குதாம் வந்துவிடும் என நம்பும் வீரப்பண்ணை ஊரில் எந்த பெண்ணாலும் 9ஆம் வகுப்பிற்கு மேலே படிக்க முடியவில்லை, அந்த சூழ்நிலையில் 8ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் அபிநயஸ்ரீ, இவருக்கு நன்றாக படித்து மருத்துவராகவேண்டும் என்று ஆசை இதனால் தான் வயதிற்கு வந்ததை தன்னுடைய அம்மாவை தவிர யாரிடமும் சொல்லவில்லை. இப்படி மிகக்கடுமையாக மூட நம்பிக்கைகளை நம்பும் ஊரில் அதுவும் 90ஸ் காலங்ககளில் அந்த பெண் டாக்டர் படித்தாரா? அவரது செயல்பாடுகள் கிராமத்தின் மூட நம்பிக்கையை மாற்றியதா என்பதுதான் மீதி கதை.

தற்போது உள்ள சூழ்நிலையிலேயே இவ்வள்வு கட்டுப்பாடுகளும் மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கும் நேரத்தில் 1990ஸ் காலங்களில் இந்த நிலையில் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்பதை தத்ரூபமாக கதையாக்கி இருக்கிறார் இயக்குனர். இந்த தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரமான தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயஸ்ரீ மூட நம்பிக்கைகளை தாண்டி வெற்றி பெறுவது, சில இடங்களில் ரத்ததை “இங்க்” என்றால் நம்புகிறார்கள் முட்டாள்கள் என்ற வசனம் எல்லாம் பட்டாயா கிளப்புகிறது.

தமிழ் செல்வியின் அப்பாவாக நடித்திருக்கும் அருவி மதன் பாசக்கார தந்தையாகவும் அதே நேரத்தில் பழக்க வழக்கங்கள் மாறக்கூடாது என்ற பெண்களை ஒடுக்கும் முறை கொண்ட ஆணின் குணத்தை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போன்று தமிழ்செல்வியின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் அனுமோல் மிகவும் நேர்த்தியாக கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தால் போது என்ற கருத்தில் நடித்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் லிங்கா மிகவும் கட்சிதமாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு உண்மைத்தன்மையை வெளிப்படுத்தினாலும் பாடல்கள் அந்த அளவிற்கு இல்லை, கதைக்கு தேவையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ராவா.

படத்தில் வரும் சிங்கம்புலி, வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டி.எஸ்.ஆர்.சீநிவாசமூர்த்தி மிகவும் நேர்த்தியாகவும் சிரிக்க வைக்கும் படியும் நடித்திருக்கின்றனர். வீரப்பண்ணை கிராமத்தில் வரும் மக்கள் அங்குள்ள மக்களாகவே வாழ்த்திருக்கின்றனர். கதை குறிப்பாக பெண் பருவமெய்தலை மையமாக கொண்டாலும் மூட நம்பிக்கைகளால் ஒரு சாதாரண விஷயத்தை பெரிய விஷயமாக்கி மக்களை முட்டாளாக்கி ஆதாயம் காணும் நபர்களுக்கு கன்னத்தில் அறையும் வகையில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கியிருக்கிறார்.

admin