சாக்ஷி அகர்வால் – நவ்னீத் கோவாவில் திருமணம்

சாக்ஷி அகர்வால் – நவ்னீத் கோவாவில் திருமணம்
சாக்ஷி அகர்வால் – நவ்னீத் கோவாவில் திருமணம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது கதையின் நாயகியாக நடிக்க தொடங்கி உள்ளார். மேலும் மாடலிங்கிலும் அசத்தி வரும் இவர் சத்தமின்றி தனது நீண்டகால நண்பராக இருந்து வரும் நவ்னீத் என்பவரை ஜன., 2ல் கோவாவில் திருமணம் செய்தார். அங்குள்ள தனியார் ஓட்டலில் இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்க இவர்களின் திருமணம் இனிதே நடந்தது.

திருமணத்திற்கு பின் கணவர் நவ்னீத் உடன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்
பத்திரிகையாளர்களிடம் அன்பான கேள்விகளுக்கு இன்முகத்தோடு பதில் அளித்தனர் மணமக்கள்

காதலை யார் முதலில் கூறியது என்ற கேள்விக்கு நவநீத் நான் தான் என்று வெட்கத்துடன் கூறியது ரசிக்கும்படி இருந்தது
மற்றும்

சாக்ஷி. அவர் கூறுகையில், ‛‛15 வருடமாக சினிமாவிற்கு முன்பு இருந்த நவ்னீத்தை எனக்கு தெரியும். ஐடி துறையில் இருந்து நான் சினிமாவிற்கு போகணும் என முடிவெடுத்த போது எனக்கு உறுதுணையாக இருந்தவர். சின்ன வயது முதலே எனது நண்பராக இருப்பவரை திருமணம் செய்தது கடவுளின் ஆசீர்வாதம். என்னுடைய நல்லது, கெட்டது எல்லவாற்றையும் அறிந்த ஒரு நபர். எனக்கு எல்லாமுமாக அவர் உள்ளார்.

தமிழில் இரண்டு, மூன்று படம் ரிலீஸிற்கு தயாராகி உள்ளது. கன்னடம், மலையாளத்திலும் ஒரு படம் ரிலீஸாக போகிறது. திருமணத்திற்கு பின் நிறைய நடிகைகள் நடித்து வருகிறார்கள், வெற்றியும் பெறுகிறார்கள். நம்முடைய கடின உழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

திருமணத்தில் அவசரம் காட்டவில்லை. என் மனதுக்கு சரி என்று பட்டதால் திருமணம் செய்தேன். அமெரிக்காவில் தனது வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடி இந்தியாவிற்கு ஷிப்ட் ஆக போகிறார் நவ்னீத். எனக்காக அவர் இப்படி ஒரு முடிவு எடுக்கும்போது அவருக்காக நானும் ஏதாவது செய்யணும் என நினைத்தேன். அதான் திருமணம் செய்தேன். மற்றபடி அவசர முடிவுவை எடுக்கவில்லை. நிச்சயம் நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். நாளை முதலே படப்பிடிப்புக்கு செல்கிறேன். நவ்னீத் உடன் இருக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதுமே எனக்கு ஹனிமூன் போன்று தான் உணர்கிறேன். அந்தளவுக்கு என்னுடைய சிறந்த நண்பராக அவர் உள்ளார்.
என்று பதில் அளித்தார்

ராஜஸ்தானிய பாரம்பரிய உடையில் மணமக்கள் இருவரும் வந்து பத்திரிகையாளர்களுக்கு அன்பான விருந்தும் உபசரித்து மகிழ்ந்தார்கள்

தன்னை உயர்த்தி ஏற்றி வைத்து அழகு பார்த்த பத்திரிக்கையாளர்களை மறவாமல் வந்து நன்றி கூறி அவர்களிடம் ஆசி பெற்ற இந்த மணமக்கள் பல்லாண்டு வாழ வேண்டும் இன்று போல் என்றும் வாழ வேண்டும் என்று பத்திரிகையின் மூத்த சகோதரர்களும் மற்ற எல்லோரும் வாழ்த்தினார்கள் கிளாசிக் சினிமாவும் வாழ்த்துகிறது வாழ்க மணமக்கள் வாழ்க பல்லாண்டு
மக்கள் தொடர்பாளர்கள் திரு ரியாஸ் அகமது அவர்கள், பாராஸ் ரியாஸ் அகமது அவர்கள்
விழாவை சிறப்பாக்கி பெருமை சேர்த்தார்கள்