சென்னை கிரீம்ஸ் ரோடு, சுகந்திரா நகர் பகுதியில் நடு ரோட்டில் திமுக பிரமுகர் மாணிக்கம் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த முதியவர் ஒருவர், அந்த காரை கடக்க முயன்றபோது, லேசாக காரில் உரசியுள்ளார். அதை பார்த்த மாணிக்கத்தின் பெற்றோர் மற்றும் சகோதரர் அந்த முதியவரை மரப்பலகை உள்ளிட்டவற்றை வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் தட்டி கேட்டபோது, அநாகிரகமான முறையில் உடையை தூக்கி காட்டி தகாத வார்த்தையில் பேசியுள்ளனர். மாணிக்கத்தின் மனைவி செல்வி, ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் ஆயிரம்விளக்கு பகுதியின் கவுன்சிலர் வேட்பாளராக திமுக சார்பில் நிறுத்தப்பட்டவர்.
மேலும் தகவலுக்கு காஞ்சனா-9840767252
பிரான்சிஸ்-7358423563