Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

srikanth-indiastarsnow.com

நடிகர் ஸ்ரீ காந்த் புதிய பட வருகையுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்

Posted on February 28, 2021February 28, 2021 By admin No Comments on நடிகர் ஸ்ரீ காந்த் புதிய பட வருகையுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்

srikanth-indiastarsnow.com

நடிகர் ஸ்ரீகாந்த் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது சென்ற ஆண்டு தனித்தனியாக நண்பர்கள், ரசிகர்கள், என சிறப்பாக பிறந்த நாளை கொண்டாடினேன். ஆனால் கொரோனா காரணமாக பாதுகாப்பை கருதி இவ்வாண்டு அவ்வாறு செய்ய இயலவில்லை. மேலும் இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நல்ல படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன, இன்று மிருகா ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் தனுஷ், ஆர்யா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பரத் ஆகியோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் நடிகர் தனுஷ் அவர்கள் வெளிநாட்டில் இருந்த போதிலும் நேரம் பார்க்காமல் ஆதரவு தெரிவித்துள்ளார். அனைரின் ஆதரவுக்கும் நன்றி. அடுத்தடுத்து சிறந்த படங்கள் கைவசம் உள்ளது. தொடர்ந்து இதே போல் உங்களை மகிழ்விப்பேன். அனைவரின் ஆதரவிற்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி…
srikanth-indiastarsnow.com

Genaral News Tags:srikanth-indiastarsnow.com

Post navigation

Previous Post: அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை
Next Post: அன்பிற்கினியல் படத்தின் திரைவிமர்சனம்

Related Posts

மஹா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் Genaral News
டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது Genaral News
அறிமுக இயக்குனர் பிரித்வி படத்தில் நடிகர் ஆதி Genaral News
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலர் ஆய்வு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறைச் செயலர் ஆய்வு Genaral News
தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புதுவித போதை பழக்கம்-அதிர்ச்சி தகவல். வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கம், தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார். மேலும், புதுக்கோட்டையில் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதனை போதை ஊசியாக மாற்றி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் பரப்பியதாக சுமார் ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், இந்த பழக்கம் தமிழகம் முழுவதும் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புதுவித போதை பழக்கம்-அதிர்ச்சி தகவல் Genaral News
சூப்பர் ஸ்டார்களை இயக்குநர்கள் தான் உருவாக்குகிறார்கள்- ஐஸ்வர்யா ராஜேஷ். Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme