நாம் உணவை எவ்வளவு எடுக்க வேஏண்டும்? எவ்வாறு எடுக்க வேண்டும்? உணவை உண்ணும்போது என்னமாதிரி இருத்தல் வேண்டும்?
———————-
@ நாம் உண்ணும் உணவு கட்டுப்பாடன்றி இருந்தால் அதுவே நமக்கு இடையூறாக அமையும். இன்றைய உணவு நாளைய பிணி என்ற நிலை மாறி உண்ணும் உணவையே நமக்கு நிவாரணியாக மாற்றியைமைக்க சில வழிகாட்டுதல்கள்.
1)எவ்வளவு, எவ்வாறு உண்பது?
உணவு உண்பதில் பின்வரும் நடைமுறைகளைக் கவனிப்பது நலம் பயக்கும்.
*உணவு உட்கொள்ளும் நேரம்
*உண்ணும் முறை
*உண்ணும் அளவு
*சமைக்கும் முறை
*உணவின் வகைகள்
a)உணவு உட்கொள்ளும் நேரம்
உணவை அதற்குரிய சரியான வேளைகளில் உட்கொள்ள வேண்டும். நேரம் தவறிய உணவு முறைகள் உடல் மற்றும் மன நலத்துக்கு ஊறு விளைவிக்கலாம். தங்கள் அலுவல் முறைகளைக் கருத்தில் கொண்டு உண்ணும் நேரத்தில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைபிடிக்க
வேண்டும்.
b)உண்ணும் முறை
உண்ணும் முறையில் தனிக் கவனம் வேண்டும். உணவு உண்பதில் அவசரம் காட்டக் கூடாது.நன்கு மென்ற பின்னரே விழுங்க வேண்டும்.ஒரு நாளில் எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் தண்ணீர் அருந்த வேண்டும்.உணவை அவசர அவசரமாக விழுங்குவதும் அதிகமாக உண்பதும் உடல் நலத்துக்கு ஊறு விளைவிப்பதாகும்.
c)உண்ணும் அளவு
ஒவ்வொருவரும் தனது வயது, உயரம், எடை, செயல்பாடுகள், வேலை, விளையாட்டு, கடின உழைப்பு, உடற்பயிற்சி முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தனக்கு தேவையான அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயிறு நிரம்ப உண்பதற்குப் பதில் ஒரளவுக்குப் போதும் என்பது வரை உண்பதே சிறந்தது. உணவில் தானிய வகைகளையும் காய்கறிகளையும் சோ்த்துக் கொள்வது நலம்.
d)சமையல் முறை
நாம் தோ்ந்தெடுக்கும் உணவுகள் எவ்வளவு சிறந்ததாக இருப்பினும் சமைக்கும் முறை நல்லதாக அமையாவிடில் அதுவே மோசமாகிவிடும். எனவே உணவு சமைக்கும் போது தனிக் கவனம் செலுத்தவேண்டும்.
சமைக்கும்போது கவனிக்க வேண்டியவை.
காய்கறிகளை நிறைய உபயோகிக்க வேண்டும்அவித்தல், வேகவைத்தல் முதலியவை சாலச் சிறந்ததுவறுவல் மற்றும் பொரியல் எப்போதாவது ஒரு முறை மட்டும் செய்க.ஒரு முறை பொரித்த எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க.மிச்சம் மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு.சமையலில் எண்ணெய், தேங்காய் முதலியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும்ஊறுகாய், அப்பளம் முதலியவை தினசரி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
e)உடலுக்கு உகந்த உணவுகள்
# தானிய வகைகள்
அரிசி, கோதுமை முதலியவை நல்ல தானிய வகை உணவினங்களாகும். கோதுமையை அவற்றின் தவிட்டுடன் உபயோகிப்பதே நல்லது. கோதுமையின் தவிட்டை சுத்திகரித்து உருவாக்கப்பட்ட மைதா மாவு உடல் நலத்துக்கு உகந்ததல்ல.
# பயிறு மற்றும் பருப்பு வகைகள்
கடலை, பயிறு மற்றும் பருப்பு வகைகள் நல்ல ஆரோக்கிய உணவுகளாகும். கடலையைத் தோலுடன் உண்பதே நல்லது. உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்கள் பயிறு மற்றும் பருப்பு வகைகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்க.
# காய்கறிகள் கீரைகள் மற்றும் பழ வகைகள்
உடலுக்கு மிகவும் அத்தியவசியமான தாதுக்கள், மற்றும் ஃபைபர் சத்துக்கள் காய்கறிகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று முறையேனும் கீரைகளை உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். பழவகைகளை தினமும் உட்கொள்க.
# பால்
பாலில் நிறைய புரோட்டீன் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு பாலும் பால் உற்பத்திப் பொருட்களும் சிறந்த உணவாகும். ஆனால் வயது முதிர்ந்தவர்கள் பாலை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவு உண்ணும் முறை:
—————————
உணவு உண்பது ஒரு கலை. அது ஒரு தவம்.
# உணவு அறுசுவை உணவாய் இருக்கட்டும். அறுசுவையையும் திகட்டும்படி சாப்பிடு.
*முதலில் இனிப்பு அதன் பின்னர் மற்ற சுவைகளை சுவைக்கும்படி சாப்பிடு.
* நாக்கில் சுவைத்து ரசித்து கூழ்மமாக்கி சாப்பிடு. நாக்கில் உணவின் சுவை மறைந்த பின்னர் சாப்பாட்டுக் கூழ்மத்தினை வயிற்றிற்கு அனுப்பு.
உணவினை உமிழ்நீர் கலந்து சுவைத்து சாப்பிடு.
* உதடு பிரிந்தால் உமிழ்நீர் கலக்காது. உதடுகள் பிரிக்காமல் உணவினை உமிழ்நீருடன் அரைத்து கூழ்மமாக்கிச் சாப்பிடு.
* சாப்பிடும்பொழுது கவனம் வேறெங்கும் சிதறவேண்டாம். உணவினில் கவனம் எளிதில் செரிக்க உதவும்.
* உமிழ்நீர் சுரக்கும்பொழுது சற்றேறக்குறைய 500 வகையான சுரப்பிகள் சுரக்கின்றன. உணவு உண்பதனில் கவனம் சிதறும்பொழுது உமிழ்நீர் சுரப்பதில்லை.
* டெக்னிக்: உதடுகளை மூடி கண்களை மூடிக்கொண்டு மெல்லும்பொழ்து உணவின் மீது முழு கவனம் கிடைக்கும். இது ஒரு தியானம்.
* உணவினை உமிழ்நீருடன் கலந்து பற்களால் கூழ்மம் ஆக்கவும்
சாப்பிடும் முன்பாக அரைமணிநேரம் நீர் அருந்தாதே. * சாப்பிட்டபின்னர் அரை மணிநேரம் நீர் அருந்தாதே. சாப்பிடும்பொழுதும் நீர் அருந்தாதே.
* தவிர்க்க இயலா காரணங்களினால் நீர் அருந்த நேரிட்டால் அது நாக்கினையும் தொண்டையையும் நனைப்பதாக மட்டும் இருக்கட்டும்.
சாப்பிடும்பொழுது தவிர்க்கவேண்டியவை:
* தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே.
* புத்தகம் படிக்காதே.
* எவருடனும் உரையாடாதே.
* கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து.
* அம்மாக்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து உணவருந்தவேண்டாமே !
* முகம் கை கால் அலம்பிய பின் உணவருந்திடு.
* குளித்துமுடித்தபின்னர் முக்கால் மணி நேரத்திற்கு உணவருந்தாதே.
* உணவருந்தியபின் இரண்டரை மணி நேரம் வரை குளிக்காதே.
* இயற்கை உணவு எதை வேண்டுமானாலும் சாப்பிடு.
* பசிக்கும்பொழுது மட்டும் உணவு கொள். அதை மனதிற்குப் பிடித்த மாதிரி ரசனையுடன் சாப்பிடு
* ஏப்பம் வரும்வரை திகட்டும்வரை உணவருந்து. ஏப்பம் வந்தபின் உணவருந்துவதை நிறுத்திவிடு. (ஏப்பம் – இரைப்பையில் வேலை முடிந்து உணவு சிறுகுடலுக்கு சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கான உடலின் சமிக்ஞை).
* உணவருந்தும்பொழுது ஏப்பம் வந்தால் நீங்கள் சரியான முறையில் உணவருந்தியதாய் பொருள்