தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழக அரசு நேரடி கொள்முதல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.600 உழவு மானியமாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஒரு ஏக்கருக்கு அறிவித்துள்ள மானியத்தைக் இன்னும் அதிகப்படியாக கூடுதலாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் 50 சதவீத விதை நெல்லை இன்னும் அதிகப்படியாக கூடுதலாக இலவசமாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு நெல் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்லை தரமாக, தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவும், உரம் தட்டுப்பாடில்லாமல் தாராளமாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயிர் கடன் கேட்டிருந்தால் அது உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்லை இலவசமாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன்