Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

செட்டிநாடு கோழிஉப்புக்கறி செய்முறை

Posted on August 29, 2019 By admin No Comments on செட்டிநாடு கோழிஉப்புக்கறி செய்முறை

கோழிக்கறி – 1/2 கிலோ,
வரமிளகாய் – 10,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
மல்லித்தூள் -1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
இஞ்சி – சிறிது,
பூண்டு – 5 பல்,
சின்ன வெங்காயம் – 10,
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை

முதலில் கறியை சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமாக கழுவவும். கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி வைக்கவும். வரமிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து வரமிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் விதைகள் பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கோழிக்கறியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு உடன் தக்காளி சேர்த்து வதக்கவும். வரமிளகாய், தக்காளி இரண்டும் தன் தோல் தளிந்து வரும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும். அதுவே இந்தக் கறியின் தனிச்சிறப்பு. மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஒரு கோப்பைத் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து தீயை மென்மையாக வேக விடவும். பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து மேலே சிறிது கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

Genaral News Tags:உப்புக்கறி, செட்டிநாடு கோழிஉப்புக்கறி செய்முறை

Post navigation

Previous Post: தமிழகத்தில் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது
Next Post: சிக்சர் பட தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்

Related Posts

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது சுமார் 22.58 டன் பட்டாசு கழிவுகள் சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது சுமார் 22.58 டன் பட்டாசு கழிவுகள் Genaral News
தீபாவளி ரேஸில் முந்துகிறது சர்தார் Genaral News
Actor Vemal starrer “Deiva Machan” first look revealed மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக் Genaral News
என்றும் தன் ரசிகர்களுக்காக வாழும் தளபதி விஜய் Thalapathy Vijay : An actor who always lives for his fans Genaral News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுத்த 133 பேர் யார்!? தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுத்த 133 பேர் யார்!? Genaral News
தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாராஹி மாநாட்டை பாராட்டினார் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாராஹி மாநாட்டை பாராட்டினார் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme