கோதுமை மாவு – 2 கப்,
ரவை – 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
பூரணத்திற்கு:
வேகவைத்து மசித்த பச்சைப் பட்டாணி – 1 கப்,
கரகரப்பாக பொடித்த காய்ந்தமிளகாய், தனியா, மிளகு, சீரகம் – தலா 1 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு, பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மேல் மாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி 15 நிமிடத்திற்கு வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி உதிர் உதிராக வந்ததும் இறக்கவும். பூரணம் ரெடி. பிசைந்த பூரி மாவிலிருந்து எலுமிச்சைப்பழ அளவு உருண்டையாக எடுத்து சொப்பு போல் செய்து 1 டேபிள்ஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து மூடி பூரிகளாக திரட்டிக் கொள்ளவும். கடாயில் பொரிக்க எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கி திரட்டிய பூரி மாவை போட்டு பொரித்தெடுத்து எண்ணெயை வடித்துக் கொள்ளவும். சாஸ், கிரீன் சட்னி, இனிப்பு சட்னியுடன் பரிமாறவும்.