சென்னை:
செய்திக்குறிப்பு:
மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் வரை நிறைவு பெற்றுள்ளது. மேலும், கோயம்பேடு மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காகவும் வேண்டுகோளை ஏற்றும் அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 4.30 வரையிலும், இரவு 9.30 முதல் காலை 7 மணி வரையிலும் கோயம்பேடு, வடபழனி, அசோக்பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக இயக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பயணம் செல்வதற்கும் மற்றும் வந்தடைவதற்கும் இணைதளம் மூலமாக பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.