சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது;-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று அதிகம் வீசும் . வெப்பநிலை வழக்கத்தை விட நான்கில் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் பீளமேட்டில் 6 சென்டி மீட்டரும், பொள்ளாச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரத்தில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்றும் கூறப்பட்டு உள்ளது.