Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஓ.பி.எஸ் மகன் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என்ற போஸ்டர்களால் பரபரப்பு

Posted on May 29, 2019 By admin No Comments on ஓ.பி.எஸ் மகன் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என்ற போஸ்டர்களால் பரபரப்பு

தேனி:
தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ம்தேதி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் தேனி மக்களவை உறுப்பினர் என்று கல்வெட்டில் பெயர் பொறிக்கபட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் பொறிக்கலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. கல்வெட்டு தொடர்பாக கோவில் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த சர்ச்சை முடிந்த நிலையில், தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்தியஅமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Genaral News Tags:ஓ.பி.எஸ் மகன் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என்ற போஸ்டர்களால் பரபரப்பு, மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஓ.பி.எஸ் மகன் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என்ற போஸ்டர்களால் பரபரப்பு

Post navigation

Previous Post: திரிணாமுல் காங்கிரஸ் 6 கவுன்சிலர்களை துப்பாக்கி முனையில் அள்ளியது????
Next Post: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை

Related Posts

தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புதுவித போதை பழக்கம்-அதிர்ச்சி தகவல். வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கம், தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார். மேலும், புதுக்கோட்டையில் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதனை போதை ஊசியாக மாற்றி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் பரப்பியதாக சுமார் ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், இந்த பழக்கம் தமிழகம் முழுவதும் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புதுவித போதை பழக்கம்-அதிர்ச்சி தகவல் Genaral News
நடிகர் விவேக் வருத்தம் தமிழகம் தண்ணீரில்லாத மாநிலமாக மாறிவருகிறது!! Genaral News
கேஎஸ்.ரவிக்குமார், பாலகிருஷ்ணா படம் தள்ளி வைப்பு Genaral News
Junior Kuppanna launched its restaurant in Nexus Vijaya Mall, Vadapalani Genaral News
Eco Friendly Electric Scooters launched to Avoid environmental pollution by BGauss Hemant Kabra, Go Zap Muthuraman & Vinodh Raj donated 50 vehicles to Food Delivery Companies. Genaral News
96′ படத்தில் என் பாடலை ஏன் வைக்க வேண்டும்? – இளையராஜா Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme