சென்னை,
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பாசரில் 5 சென்டிமீட்டரும், நடுவட்டம் மற்றும் கிளன் மார்கனில் 3 சென்டிமீட்டரும், கொல்லிமலை, கொடநாடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 2 சென்டிமீட்டரும், பெருந்துறையில் 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது