Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இன்று தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக 36 இடங்களில் முன்னிலை, அதிமுக 2 இடங்களில் முன்னிலை

Posted on May 23, 2019 By admin No Comments on இன்று தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக 36 இடங்களில் முன்னிலை, அதிமுக 2 இடங்களில் முன்னிலை

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை காட்டிலும் 22 சட்டசபை தொகுதிகளின் முடிவை தமிழகம் உற்று நோக்கி வருகிறது. இந்த தேர்தலின் முடிவு தான் அ.தி.மு.க. ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்க உள்ளது. ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்விக்கும் விடையளிக்க இருக்கிறது. மதியம் முன்னிலை நிலவரங்களின்படி, திமுக 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டசபையின் தற்போதைய எண்ணிக்கை 212. இதில் அ.தி.மு.க.-111 (சபாநாயகர் சேர்த்து), அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களாக (இரட்டை இலை சின்னத்தில் போட்டி) தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக இருக்கிறது.

ஆனால் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருப்பதாலும் அவர்களை கழித்து பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 109 ஆக உள்ளது.

போதுமான அளவு மெஜாரிட்டி இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்படுகிறது. 22 இடங்களில் 9 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மிக எளிதாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும்.

Health News

Post navigation

Previous Post: இன்று தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன
Next Post: கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்

Related Posts

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார் Health News
வெந்தயத்தை காலையில் எழுந்தவுடன் வெறும்வயிற்றில் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் வெந்தயத்தை காலையில் எழுந்தவுடன் வெறும்வயிற்றில் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் Health News
புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பங்கு அளப்பரியது என்று புதுச்சேரி முதல்வர் Health News
தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புதுவித போதை பழக்கம்-அதிர்ச்சி தகவல். வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியாக மாற்றி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கம், தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார். மேலும், புதுக்கோட்டையில் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதனை போதை ஊசியாக மாற்றி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் பரப்பியதாக சுமார் ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், இந்த பழக்கம் தமிழகம் முழுவதும் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புதுவித போதை பழக்கம்-அதிர்ச்சி தகவல் Genaral News
SIMS Hospital Conducts Successful High Performance Hip Replacement Surgery on 62 Year Old UK National through advanced technology SIMS Hospital Conducts Successful High Performance Hip Replacement Surgery on 62 Year Old UK National through advanced technology Health News
மித்ஷாவிடம் கேளுங்கள் என்னிடம் வேண்டாம்.ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்காத மோடி. Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme