லாஹூர்,
பாகிஸ்தானில் போதை பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் (வயது 52). கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை சிந்த் மாகாணத்தின் 25வது முதல் மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார். சமீபத்தில் இவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் முசாபர்கார் மாவட்டத்தில் கான்கர் கிராமத்தில் வசித்து வந்த மஹர் திடீரென மாரடைப்பினால் இன்று மரணம் அடைந்து உள்ளார். அவரது மறைவுக்கு அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இதன்பின் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இதனை தொடர்ந்து அவர் மந்திரியானார்