Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜெயங்கொண்டம் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடுதல் நிகழ்ச்சி

Posted on May 19, 2019May 19, 2019 By admin No Comments on ஜெயங்கொண்டம் ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடுதல் நிகழ்ச்சி

ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடுதல் நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் காந்தி பூங்கா அருகில் உள்ள ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை தேவாங்கர் சேடர் குளத்தில் இருந்து பக்தர்கள் கத்தி போடுதலுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ராமலிங்க சாமுண்டீஸ்வருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கத்தி போடுதல் நிகழ்ச்சி யுடன் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தபோது ஜெயங்கொண்டம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை ஜெயங்கொண்டம் போலீசார் ஒழுங்கு படுத்தினர்.

Health News

Post navigation

Previous Post: சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை
Next Post: சேலத்தில் வாகன சோதனை:வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல்

Related Posts

கசட தபற’ படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல் Cinema News
வைகோ அதிர்ச்சி Health News
சிறுநீரகக் கல் கரைக்கும்... மாதவிடாய்க் கோளாறு நீக்கும் சிறுபீளை! சிறுநீரகக் கல் கரைக்கும்… மாதவிடாய்க் கோளாறு நீக்கும் சிறுபீளை! Genaral News
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் Health News
Hello Doctor - 2001 SIMS Hospital’s Launches Hello Doctor – 2001 2001 Health News
ராகுல் காந்தி முன்னணியில் உள்ளார் Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme