தலைமை நீதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்த சின்மயிக்கு அனுமதி மறுப்பு
தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை உச்சநீதிமன்றம் உரிய முறையில் விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி பின்னணி பாடகி சின்மயி சென்னை காவல்துறைக்கு மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த சென்னை காவல்துறை
சின்மயி போராட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் அளித்த விளக்கத்தில் “நீதித்துறைக்கே எதிராக நடைபெறும் போராட்டமாக இதனை ?கருதுவதால் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது” என்று இந்த மனுவை தள்ளுபடி செய்ததாக தெரிவித்துள்ளனர்.