மீண்டும் கூடுகிறது
செயற்குழு
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
அந்த 6 மாதகால அவகாசம் முடிவு பெற்றிருக்கும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் அவசர செயற்குழு கூட்டம் வரும் 14ம் தேதி அன்று தி.நகரில் உள்ள விடுதியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.