விரைவில் முடிவுக்கு வருகிறது களவாணி -2 பஞ்சாயத்து..
நடிகர் விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்குமான பிரச்சனை, இயக்குநர் சற்குணம் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இடையிலான பிரச்சனையாக மாறி வருவதால், அதனைத் தீர்ப்பதற்காக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி வகித்த பட்டுக்கோட்டை மகேந்திரன் திருப்பரங்குன்றம் தேர்தல் பணியிலிருந்து உடனடியாக சென்னை திரும்பி வந்துள்ளார். நடிகர் விமலுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாகவும், பணத்தை திருப்பித்தர நடிகர் விமல் தயாராகி வருவதாகவும், இன்னும் இரண்டு தினங்களுக்குள் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தரப்பு வழக்கை வாபஸ் வாங்கி விடும் என சேலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.